/

சொன்ன வாக்கைக் காப்பாற்றுவாரா நடிகர் அஜித் ? - பிரபலத்தின் பதிவால் ரசிகர்கள் ஆவல்

நடிகர் அஜித் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரானின் பதிவை பகிரும் ரசிகர்கள், இருவரும் இணைவது குறித்து ஆவல் தெரிவித்து வருகின்றனர். 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:10 pm IST

நடிகர் அஜித் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரானின் பதிவை பகிரும் ரசிகர்கள், இருவரும் இணைவது குறித்து ஆவல் தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இருந்து வெளியான வேற மாரி பாடல் மற்றும் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக வேற மாரி பாடலை யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 

இந்தப் படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் 'வலிமை' மற்றும் 'மாநாடு' படங்களின்  இரண்டாவது பாடல் தயாராகிவிட்டன எனவும் விரைவில் வெளியாகும் எனவும் 'மாநாடு' பட இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார். 

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஜிப்ரான் சந்தித்து பேசியது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதனை அஜித் ரசிகர்கள் இப்போது பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர். 

அந்தப் பதிவில், 'நடிகர் அஜித்தை நான் சந்தித்தது ஒரு ரசிகரின் சந்திப்பு போன்றது. அவரைப் பற்றி எல்லோரும் சொல்வதைக் காட்டிலும் அதிகம் சிறப்பானவராக இருக்கிறார். அவர் 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்று என்னிடம் சொன்னது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது'' என்றார். இந்த சுட்டுரைப் பதிவை பகிரும் ரசிகர்கள், இருவரும் இணைவது குறித்து தங்கள் ஆவலை தெரிவித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.