சிம்புவுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் 'மாநாடு' படத்தின் வெற்றி அமைந்துள்ளது. இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு', கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்', கௌதம் கார்த்துக்குடன் இணைந்து 'பத்து தல' உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார்.
இதில் கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது 'மாநாடு' படத்தின் வெளியீடு காரணமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை நடிகர் சிம்பு துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படப்பிடிப்பு ஆரம்பம் என்று தெரிவித்துள்ளார்.
'வெந்து தணிந்தது காடு' படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ராதிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


