ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

'மாஸ்டர்' தயாரிப்பாளருடன் இணையும் 'ரைட்டர்' இயக்குநர் - பா.ரஞ்சித் அறிவிப்பு

மாஸ்டர் படத் தயாரிப்பாளருடன் ரைட்டர் இயக்குநர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :30 டிசம்பர் 2021, 11:46 am IST

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடித்து கடந்த வாரம் திரையரங்கில் வெளியான படம் 'ரைட்டர்'. ஃபிராங்க்ளின் ஜேக்கப் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 

இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ''ரைட்டர் படத்துக்கு விமர்சகர்கள் மற்றும் மக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பினால் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்தை ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கவிருக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்தை லலித் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.