சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மாபெரும் வெற்றிபெறும் என பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தை, நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகின்றனர்.
இதையும் படிக்க| புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகை: பரவும் தகவல்
இந்தப் படத்தையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். டாக்டர் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனும் பிரியங்கா அருள் மோகனும் இணைந்து டான் படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்.கே.புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, படமாக்கப்பட்ட நாட்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. அதற்காக இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி. டான் திரைப்படம் நிச்சயம் மாபெரும் வெற்றிபெறும். பின்குறிப்பு: இன்று இந்தியாவின் டான் அமிதாப் பச்சனின் பிறந்தநாள் என்று குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் கணிப்பு சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக கூட்டணி முயற்சி உண்மையெனில் இதைவிட பெரிய அரசியல் மோசடி இருக்க முடியாது: வைகோ

விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மீனவா்கள்

தொழில் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்கம்

விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



