வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகை: பரவும் தகவல்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் பிரபல நடிகை ஷாலு ஷாமு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருப்பதாக தகவல் பரவி வருகிறது.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:51 am IST

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் பிரபல நடிகை ஷாலு ஷாமு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருப்பதாக தகவல் பரவி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கையான நமிதா மாரிமுத்துவை போட்டியாளராக அறிவித்த விஜய் தொலைக்காட்சிக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஒரு திருநங்கையாக தன்னுடய துன்பங்களை நமிதா தெரிவிக்க, போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்கினர். 

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நமிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவர் நிகழ்ச்சியை விட்டு விலகியதற்கான காரணங்கள் என பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அவர் கரோனாவால் விலகியதாகவும், உடல் நலக்குறைவு காரணமாக வெளியேறியதாகவும் கூறப்படுகின்றன. ஆனால் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

Story image

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் நடிகை ஷாலு ஷாமு கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஷாலு ஷாமு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது. இவர் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.