உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

செல்வராகவன் - தனுஷ் கூட்டணியின் நானே வருவேன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:54 am IST

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 16) பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மேயாத மான், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்துஜா நடிக்கிறார். 

Story image

வி கிரியேசன்ஸ் சார்பாக தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்க, யாமினி ஒளிப்பதிவு செய்கிறார். முதலில் இந்தப் படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வார் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யோகி பாபு கடைசியாக தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தில் நடித்திருந்தார். பொதுவாக செல்வராகவன் தனது படங்களில் நகைச்சுவை நடிகர்களைப் பயன்படுத்தமாட்டார். அதனால் இந்தப் படத்தில் யோகி பாபு குணச்சித்திர வேடத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.