இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: நடிகர் சித்தார்த் என்ன சொன்னார் தெரியுமா ?

தான் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டவரை, நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.
இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: நடிகர் சித்தார்த் என்ன சொன்னார் தெரியுமா ?

தான் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டவரை, நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் கடைசியாக நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 

கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த் நடித்து வரும் 'இந்தியன் 2' திரைப்படம் படப்பிடிப்பு முழுமையடையாமல் பாதியில் நிற்கிறது. இதனையடுத்து தெலுங்கில் சர்வானந்த்துடன் இணைந்து 'மஹா சமுத்திரம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று ஹிந்தி பிக்பாஸ் பிரபலம் மற்றும் நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக மரமடைந்தார்.

இதனையடுத்து ரசிகர் ஒருவர் தமிழ் நடிகர் சித்தார்த்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்தார். இதற்கு கருத்து தெரிவித்துள்ளார். இது திட்டமிடப்பட்ட, ஒருவரை குறி வைத்து செய்யப்படும் வெறுப்பு மற்றும் துன்புறுத்துதல் ஆகும். என்று கடுமையாக சாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com