சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: நடிகர் சித்தார்த் என்ன சொன்னார் தெரியுமா ?

தான் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டவரை, நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:44 am

தான் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டவரை, நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சித்தார்த். நடிகர் சித்தார்த் கடைசியாக நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 

கமல்ஹாசனுடன் இணைந்து சித்தார்த் நடித்து வரும் 'இந்தியன் 2' திரைப்படம் படப்பிடிப்பு முழுமையடையாமல் பாதியில் நிற்கிறது. இதனையடுத்து தெலுங்கில் சர்வானந்த்துடன் இணைந்து 'மஹா சமுத்திரம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று ஹிந்தி பிக்பாஸ் பிரபலம் மற்றும் நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக மரமடைந்தார்.

இதனையடுத்து ரசிகர் ஒருவர் தமிழ் நடிகர் சித்தார்த்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்தார். இதற்கு கருத்து தெரிவித்துள்ளார். இது திட்டமிடப்பட்ட, ஒருவரை குறி வைத்து செய்யப்படும் வெறுப்பு மற்றும் துன்புறுத்துதல் ஆகும். என்று கடுமையாக சாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.