
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல்-14 ஆம் தேதி வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் ஜெர்மன் திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியிருக்கிறது.
இதையும் படிக்க | நாளை(செப்-17) வெளியாகிறது ‘கோடியில் ஒருவன்’
‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பின் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அடைந்ததும் அல்லாமல் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.
அதற்கடுத்து ’கர்ணன்’ திரைப்படம் பல சர்வதேச திரை விழாக்களில் கலந்து வருகிற நிலையில் தற்போது ஜெர்மன் திரைப்பட விழாவிற்கும் தேர்வாகியிருக்கிறது. இதன் மூலம் ப்ராங்பர்ட் நகரில் வருகிற அக்-12,13,14 ஆம் தேதிகளில் நடைபெறும் நியூ ஜெனரெஷன் இண்டிபெண்டண்ட் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.