சூப்பர் சிங்கர் மாளவிகா தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலர் தற்போது முன்னணி பாடகர்களாக திகழ்கின்றனர்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் மாளவிகா. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். பின்னர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த மனம் கொத்தி பரவை படத்தில் டங் டங் என்ற பாடலை பாடினார்.
மேலும் அவர் பாடல் பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அவற்றிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அவர் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.