''இளையராஜாவை காயப்படுத்தாதீங்க'': விஜயகாந்த் வேண்டுகோள்

இளையராஜாவை காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
''இளையராஜாவை காயப்படுத்தாதீங்க'': விஜயகாந்த் வேண்டுகோள்
Published on
Updated on
1 min read

சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கரும் மோடியும் என்ற நூல் வெளியானது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையையொட்டி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்றைக்கும் அவரவர் துறையில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர். 

ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோலத்தான் இங்கு யாரையும் ஒப்பிட்டு பேச முடியாது. அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக்கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது''. என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com