ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து

ஜெய்பீம் தொடர்பாக சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 10:23 am

DIN

ஜெய்பீம் தொடர்பாக சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். 

இந்தப் படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது என நடிகர் சூர்யா மீதும் இயக்குநர் ஞானவேல் மீதும் சந்தோஷ் என்பவர் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் புகார் அளிக்கும் முன்பே நீக்கப்பட்டதாகவும் அதனால் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் சூர்யா மற்றும் ஞானவேல் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என நீதிபதி கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று(ஆகஸ்ட் 11) விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.