தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கொட்டும் மழையில் ரசிகர்கள்: லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்!

கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

News image

லதா ரஜினிகாந்த்

Updated On :6 பிப்ரவரி 2024, 6:21 pm IST

கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவிக்க  அவரது ரசிகர்கள் கொட்டும் மழையிலும் போயஸ்கார்டனில் உள்ள  வீட்டின்முன்பு திரண்டனர்.

இந்நிலையிலும் லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது," ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அவர் ஊரில் இருந்திருந்தால் ரசிகர்களை சந்தித்து இருப்பார். அவர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம்". என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். ரஜினிகாந்த் எங்கு சென்று இருக்கிறார் என்ற தகவலை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வெளியிடவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு அரசியர் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.