''நயன்தாரா இங்க இல்ல, அவங்களுக்காக நான் சொல்றேன்'': சமந்தாவின் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

நடிகை சமந்தா நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 
''நயன்தாரா இங்க இல்ல, அவங்களுக்காக நான் சொல்றேன்'': சமந்தாவின் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி
Published on
Updated on
1 min read

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

இந்தப் படத்தில் ராம்போவாக விஜய் சேதுபதியும் கண்மணியாக நயன்தாராவும் கடிஜாவாக சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று 22 ஆம் தேதி 2 ஆம் மாதம், 2022 ஆம் வருடத்தை முன்னிட்டு நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், 22.02.2022 அன்று 20.02 மணி நேரத்தில் சிறப்பான நாள். நம்முடைய நட்புக்காக நயன்தாரா. நயன்தாரா சமூக வலைதளங்களில் இல்லை. ஆனால் அவர் தனது அன்பை உங்களுக்கு(ரசிகர்களுக்கு) அனுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com