பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போகிறார்கள் உச்சத்தில் இருக்கிறது. இந்த இறுதி நிகழ்ச்சியில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று என்று கூறப்படுகிறது.
குறிப்பாக கடந்த சீசனின் வெற்றியாளர் ஆரி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என்னை நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்ப்பீர்கள் என்று எனக்கு தெரியும். எனக்கும் உங்களையும் நடிகர் கமலையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். ஆனால் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. என்று தெரிவித்துள்ளார்.