நார்வே திரைப்பட விழாவில் வெங்கட் பிரபு, யுவன் உட்பட மாநாடு குழுவினருக்கு விருது

மாநாடு படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதை நார்வே திரைப்பட விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு வென்றார். 
நார்வே திரைப்பட விழாவில் வெங்கட் பிரபு, யுவன் உட்பட  மாநாடு குழுவினருக்கு விருது
Updated on
1 min read

சிம்பு - எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் 50வது நாளை படக்குழு கொண்டாடினர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். 

இந்த நிலையில் நார்வே திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது வெங்கட் பிரபுவுக்கும் சிறந்த இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் சிறந்த படத்தொகுப்பாளர் விருது பிரவீன் கேஎல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

இதனையடுத்து படக்குழுவினருக்கு பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபுவின் புதிய படம் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com