விவாகரத்துக்கு இதுதான் காரணம் - பிரபல இயக்குநரிடம் முதன்முறையாக மனம் திறந்த சமந்தா

நடிகை சமந்தா தனது திருமண வாழ்க்கை குறித்து இயக்குநர் கரண் ஜோகரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார். 
விவாகரத்துக்கு இதுதான் காரணம் - பிரபல இயக்குநரிடம் முதன்முறையாக மனம் திறந்த சமந்தா
Published on
Updated on
1 min read

நடிகை சமந்தா தனது திருமண வாழ்க்கை குறித்து இயக்குநர் கரண் ஜோகரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் மனம் திறந்துள்ளார். 

தி பேமிலி மேன் 2, புஷ்பா பட ஓ அண்டாவா பாடல் என இந்திய அளவில் ரசிகர்களிடையே பிரபலமாகியிருக்கிறார் சமந்தா. 

இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தா கலந்துகொண்டார். 

இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் சமந்தாவின் திருமண வாழ்க்கை குறித்து கரண் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த, திரைப்படங்களில் நீங்கள் திருமண வாழ்க்கையை காட்டிய தருணங்கள் நன்றாக இருந்தது.

ஆனால் உண்மையில் கேஜிஎஃப் போன்றுதான் திருமண வாழ்க்கை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது முழு பதிலும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளில் தெரியவரும். 

கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தாவும், நாக சைன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபரில் இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com