வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கார்த்தி என் தம்பியா? பிருந்தா புகைப்படத்துடன் விளக்கம் : கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா ?

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பிருந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். 

News image
Updated On :10 மார்ச் 2022, 12:21 pm IST

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் சகோதரியான பிருந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட சிறிய வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Story image

அவரது பதிவில், எனக்கு மிகவும் விருப்பமான படம். எனக்கு எப்பொழுதும் எனது சகோதரர்கள் போல இருக்க வேண்டும். அதனால் ஆண்கள் அணியும் உடையை அணிவேன். முடியை நீளமாக வளர்ப்பதை வெறுப்பேன். ஏனெனில் நான் என் சகோதரர்களிடமிருந்து வித்தியாசமாக தெரியக் கூடாது என்பதற்காக. 

Story image

நான் கல்லூரி படிக்கும் வரை என் மூத்த அண்ணனின் சட்டையையும், இளைய அண்ணனின் ஜீன்ஸையும் அணிவேன். இப்பொழுதாவது நான்தான் இளையவள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். 

இப்பொழுதும் மக்கள் என்னிடம் கார்த்தி என் தம்பியா எனக் கேட்பார்கள். இனிமேல் அப்படிக் கேட்காதீர்கள்'' என குறிப்பிட்டுள்ளார். 

அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, ''உன்னை விட நான் இளமையாக தெரிவதற்கு, என்னால் என்ன செய்ய முடியும் ?''எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, ''நீங்கள் மூவரும் மிக அழகாக இருக்கிறீர்கள்'' என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.