பாபா மறுவெளியீடு: டப்பிங் பணிகளை முடித்தார் ரஜினி!

சூப்பர் ஸ்டாரின் ‘பாபா’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாபா மறுவெளியீடு: டப்பிங் பணிகளை முடித்தார் ரஜினி!
Published on
Updated on
1 min read

சூப்பர் ஸ்டாரின் ‘பாபா’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட படம் பாபா. இந்த படத்தை அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தை தொடர்ந்து நான்பாவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், முக்கிய வேடங்களில் ரியாஸ் கான், கவுண்டமணி, தில்லி கணேஷ், சுஜாதாம் நம்பியார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பாபா படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளான நிலையில், மீண்டும் புதுப்பொழிவுடன் திரையில் வெளியாக தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு, நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு படத்தை மேம்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, படத்தில் சில காட்சிகளுக்கு மீண்டும் டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார் ரஜினி. டப்பிங் செய்யும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும், படத்தில் வரும் பிரபல பாடல்களான மாயா மாயா, கிச்சு கிச்சு, சக்தி கொடு ஆகிய பாடல்கள் டால்பி மிக்ஸ் தொழில்நுட்பத்தில் ஏ.ஆர்.ரகுமான் மாற்றியுள்ளார்.

இந்த படம், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com