

தெறி படத்துக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் மீண்டம் இணைவது குறித்து பிரபலம் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியான புதிய போஸ்டர் இதனை உறுதி செய்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சண்டை பயிற்சி இயக்குநர் திலிப் சுப்புராயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு பட அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், தெறி படத்துக்கு நடிகர் விஜய்யுடன் பணிபுரிந்துள்ளேன். இந்தப் படத்தில் ஜாலியான அதே நேரம் அதிரடியான சண்டைகாட்சிகள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | சிவகார்த்திகேயனுடன் மோதும் மிஷ்கின்
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தமன் இசையில் விஜய் பாடியுள்ள இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரபு, சங்கீதா, ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.