பொன்னியின் செல்வனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு பயத்தை ஏற்படுத்துவதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
நாளை (செப்.30) ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: மருத்துவரைச் சந்தித்த ராஷ்மிகா: என்ன பிரச்னை?
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விக்ரம், பார்த்திபன், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு நடிகைகள் திரிஷா, ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் சோபிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, பேசிய நடிகர் விக்ரம் ‘பொன்னியின் செல்வனுக்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு வியப்பளிக்கிறது. படத்தை விளம்பரப்படுத்த சென்ற இடங்களிலெல்லாம் நல்ல வரவேற்புக் கிடைத்தது. திருவிளையாடலுக்குப் பிறகு எல்லாத் தலைமுறையினரும் காத்திருக்கும் படமாக பொன்னியின் செல்வன் இருப்பதை நினைக்கும்போது பெருமையாகவும் ரொம்ப பயமாகவும் உள்ளது. நாளை படத்தைக் காண வயதானவர்களும் வருவார்கள் என்பதால் திரையரங்க நிர்வாகத்தினர் அவர்களுக்கு உதவ வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


