குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பூஜையுடன் துவங்கியது நடிகர் அஜித்தின் 'ஏகே 61' படப்பிடிப்பு - கதை இதுவா?

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 

Published On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST

'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படங்களுக்கு பிறகு இயக்குநர் வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி இணைந்துள்ள படம் 'ஏகே 61'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இன்று (ஏப்ரல் 11) பூஜையுடன் துவங்கியது. 

இந்தப் படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறதாம். இதற்காக ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வங்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

குறிப்பாக ஏகே 61 படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. காரணம் வலிமை படத்தின்போது யுவனுடன் இயக்குநர் வினோத்துக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வலிமை படத்துக்கு ஜிப்ரான் பின்னணி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.