போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியே வந்திருக்கும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், ஐபிஎல் அணி வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுவந்தார்.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக இணையத் தொடர் ஒன்றை இயக்கும் முயற்சிகளில் ஆர்யன் கான் ஈடுபட்டுவருகிறாராம். இதற்காக முன்கட்ட தயாரிப்பு பணிகளில் அவர் தற்போது இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இணையத் தொடரில் ஆர்யன் கானின் சகோதரி சுஹானா கான், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தா நந்தா, நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த இணையத் தொடரில் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரிவார்கள் என்று தெரிகிறது. தொடருக்கு பிறகு திரைப்படம் ஒன்றையும் ஆர்யன் கான் இயக்கவிருக்கிறாராம்.