அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

மீண்டும் தள்ளிப்போனது விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' - தயாரிப்பாளர் சொன்ன காரணம்

விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 2:32 pm IST


நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் முதலில் மே 6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் சேதுபதியின் மற்றொருபடமான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வருகிற ஏப்ரல் 28 வெளியாவதால், ஒருவார இடைவேளையில் விஜய் சேதுபதியின் படங்கள் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால் மாமனிதன் படம் மே 20 ஆம் தேதிக்கு தள்ளி வகைக்கப்பட்டது. 

இந்த நிலையில் 'மாமனிதன்' படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் வெளியாவதால் மாமனிதன் திரைப்படத்தின் வெளியீடு மே 20 ஆம் தேதியிலிருந்து ஜூன் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. 

'மாமனிதன்' திரைப்படம் தமிழ் நாட்டில் 400 திரையரங்குகளிலாவது வெளியாகவேண்டும். திரையரங்க உரிமையாளர்களிடமும், விநியோகிஸ்தர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமனிதன்' படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.