
நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக ஆடியோ பதிவிட்டு சமூகத்தில் பிரச்னையை ஏற்படுத்தியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த மீரா மிதுன் தரப்பினர், ஆடியோ பதிவிட்ட நாளில் வேறொரு நிகழ்வில் இருந்ததாகவும், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
காவல்துறை தரப்பில், ஒவ்வொருவரின் மீதும் அவதூறான உண்மைக்கு புறம்பான கருத்துகளை பதிவிடுவதை மீரா மிதுன் வழக்கமாக வைத்துள்ளதாகவும், ஏற்கனவே பட்டியலின மக்களை விமர்சித்து தடுப்பு காவலில் கைதாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மீரா மிதுனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அவரை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், சமூக வலைதளங்களில் உள்ள அவரின் பதிவுகளை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.