தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித் குமார் (விடியோ)

படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சென்னை விமான நிலைம் வந்த நடிகர் அஜித் குமாரின் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2022, 5:48 pm IST

படப்பிடிப்பிற்குச் செல்வதற்காக சென்னை விமான நிலைம் வந்த நடிகர் அஜித் குமாரின் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், படப்பிடிப்பிற்கு செல்வதற்காக நடிகர் அஜித் குமார் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரைக் கண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

Story image

அதனைத் தொடர்ந்து பயணிகளுடன் பயணியாக பேருந்தில் நின்றபடி பயணம் செய்தார். இந்த விடியோவை அஜித் குமாரின் ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். 

ஐரோப்பிய சுற்றுப்பயணம் மற்றும் திருச்சி ரைஃபிள் கிளப் துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்கு பிறகு அஜித் குமாரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வினோத் உடனான படத்திற்கு பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ளார். வெளிநாடு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள விக்னேஷ் சிவன் நாடு திரும்பியதும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.