வேட்டையாடு விளையாடு 2 படம் குறித்து இயக்குநர் கௌதம் மேனன் தகவல் தெரிவித்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் கமல் ரசிகர்களிடையே மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது.
இப்பொழுது லோகேஷ் எப்படி ஒரு கமல் ரசிகராக ரசித்து ரசித்து விக்ரம் படத்தை உருவாக்கியிருந்தாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் கமல்ஹாசனை மிக நேர்த்தியாக காட்டியிருந்தார் இயக்குநர் கௌதம்.
குறிப்பாக இந்தப் படத்தின் துவக்க காட்சியில் என் கண்ணு வேணும்னு கேட்டியாமே என கமல் பேசும் காட்சிக்கு திரையரங்குகளில் விசில் பறந்தது. விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக லோகேஷின் விக்ரம் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது இந்தியன் 2 படமும் உருவாகிவருவதால் வேட்டையாடு விளையாடு 2 படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வேட்டையாடு விளையாடு 2 குறித்து இயக்குநர் கௌதம் மேனன் பேசும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஏற்கனவே வேட்டையாடு விளையாடு 2 படத்துக்கான கதையை 120 பக்கம் வரை எழுதிவிட்டேன். கடைசி அரை மணி நேரத்தை செதுக்கிக்கொண்டு இருக்கிறேன்.
கமல்ஹாசன் ஒப்புக்கொள்வாரா தெரியவில்லை. வேட்டையாடு விளையாடு 2 படத்தை எனது அடுத்த படமாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
#KamalHaasan's #VettaiyaaduVilaiyaadu 2 - #GVM's words
â VCD (@VCDtweets) August 19, 2022
Already written 120 pages script
Last half an hour sethukitiruken
I don't know if #Kamal sir will agree, but I look forward to be this as my next film
Your thoughts on this sequelpic.twitter.com/lbSIJQKVQ0
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திரச் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

அனைத்து நிறுவனங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்காக புகாா் பெட்டி

பயணிகள் கவனத்திற்கு... மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி: மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்!

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



