தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மனைவி கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமாக அறிவித்த நரேன் - பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் நரேன் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. 

Published On :

நடிகர் நரேன் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. 

மலையாள நடிகரான நரேன் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் நரேன் நடித்த அஞ்சாதே திரைப்படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. தமிழின் குறிப்பிடத்தகுந்த படங்களில் அஞ்சாதே படமும் இருக்கிறது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு கைதி படத்தில் காவல்துறை அதிகாரியாக நரேன் அனுபவ நடிப்பைக் காட்டினார். கைதி படத்தின் தொடர்ச்சியாக உருவான லோகேஷின் விக்ரம் படத்திலும் நரேன் நடித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 

50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிய விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த நிலையில் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி மகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Story image

அவரது பதிவில், எங்கள் 15வது ஆண்டு திருமண நாளில் எனது மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

கடந்த 2007 ஆம் ஆண்டு மஞ்சு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளரை நரேன் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 14 வயதில் மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.