16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

'நட்சத்திரம் நகர்கிறது' படம் பார்த்து ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய ஹிந்தி இயக்குநர்

நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப், பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். 

Published On :

நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப், பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதன்முறையாக இசையமைப்பாளர் தென்மாவுடன் பா.ரஞ்சித் கைகோர்த்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. 

Story image

காதலின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து பேசும் இந்தப் படத்தின் டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் மும்பையில் திரையிடப்பட்டது. 

Story image
Story image

அப்போது ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை நந்திதா தாஸ் உள்ளிட்டோர் படம் பார்த்தனர். இந்த நிலையில் படம் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு நட்சத்திரம் நகர்கிறது படம் மிகவும் பிடித்துவிட்டதாம். இதனையடுத்து அவர் இயக்குநர் பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். 

அனுராக் காஷ்யப் எப்பொழுதும் நல்ல தமிழ் படங்களை பாராட்டத் தவறுவதில்லை. அவரது 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்துக்கு சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம்' படம் முன்மாதிரியாக இருந்ததாக அவர் பல தருணங்களில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.