இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

மறைந்து 26 ஆண்டுகள்... இன்றும் டிரெண்டிங்கில் 'சில்க் ஸ்மிதா'!

தமிழ் சினிமாவில் குறைந்த இடைவெளியில் அதிக அளவிலான ரசிகர்களைப் பெற்ற நடிகைகளின் பட்டியலில் சில்க் ஸ்மிதா என்றும் தனித்த இடத்தைப் பிடித்திருப்பார்.

News image

சில்க் ஸ்மிதா

Updated On :6 பிப்ரவரி 2024, 6:21 pm IST

மறைந்து 26 ஆண்டுகள் ஆனாலும் தனது பிறந்தநாளன்று சில்க் ஸ்மிதா என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

சில்க் ஸ்மிதா, பிறந்தநாள் வாழ்த்துகள் சில்க் ஸ்மிதா, என்ற இரு ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் குறைந்த இடைவெளியில் அதிக அளவிலான ரசிகர்களைப் பெற்ற நடிகைகளின் பட்டியலில் சில்க் ஸ்மிதா என்றும் தனித்த இடத்தைப் பிடித்திருப்பார்.

அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அவர் நடித்திருந்தார். இதனால் அவரை அறியாத சினிமா ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம்.

இவர் 17 ஆண்டுகளில் 5 மொழிகளில் 450க்கும் அதிகமான படங்களில்  நடித்துள்ளார். சில்க் ஸ்மிதாவுக்கு இன்று (டிச.2) 62வது பிறந்தநாள். சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளையொட்டி அவரின் ரசிகர்கள் வித்தியாசமான முறைகளில் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதுத்துணி கொடுத்தும், டீக்கடைகளில் கேக் வெட்டியும் பலர் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். ஈரோட்டில் ஒரு டீக்கடை முழுக்க அவரின் புகைப்படங்களே இடம்பெற்றுள்ளன. 

மறைந்து 26 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகையின் பிறந்தநாள் இத்தனை விமரிசையாக கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. மறைந்தும் மறையாமல் இருக்கும் திரைப்பிரபலங்களில் சில்க் ஸ்மிதாவிற்கு எப்போதும் தனித்த இடம் உண்டு என்பதை இதன் மூலம் அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.