இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

சீரியல் நடிகையுடன் அஜித் குமார்! குடும்பத்துடன் பகிர்ந்த புகைப்படம்

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:29 pm IST

எச். வினோத் இயக்கத்தில் உருவான துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். 

வெள்ளை நிற நீள தாடியுடன் காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு மாஸாக இருந்த அஜித் குமார் தற்போது நேர் எதிராக தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். 

பஞ்சாபில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு துணிவு படம் உருவாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து துணிவு படத்துக்காக எச்.வினோத், அஜித்குமார், போனி கபூர் கூட்டணி அமைத்துள்ளனர். 

இந்த திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து தற்போது, பொங்கலுக்கு வெளியாகத் தயாராகவுள்ளது. இதனிடையே துணிவு கெட்டப்பில் நடிகர் அஜித் குமார் இருசக்கர வாகனத்தில் சில பயணங்களை மேற்கொண்டார்.

Story image

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். மீசை, தாடியை எடுத்து தலை முடியின் நிறத்தையும் மாற்றியுள்ளார். இந்த தோற்றத்தில் சீரியல் நடிகையின் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். 

அந்தப் படம் தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அஜித்குமார் தற்போது பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போன்று மாறியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.