நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை மிஞ்சினார் ஜனனி!

இலங்கையைச் சேர்ந்த ஜனனி பிக்பாஸ் சீசன் 6-ல் பங்குபெற்றார்.  ஊடகத் துறையில் நெறியாளராக இருந்த ஜனனி, இந்த சீசனின் லாஸ்லியாவாக இருப்பார் என பலரிடையே எதிர்பார்ப்பு நிலவியது. 

News image
Updated On :21 டிசம்பர் 2022, 4:15 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இலங்கையைச் சேர்ந்தவர்களாக லாஸ்லியா, ஜனனி ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். 

இருவருமே ஊடகத் துறையில் பணியாற்றி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா ஆர்மிக்கு பிறகு லாஸ்லியாவுக்கு தீவிரமான ஆர்மி உருவானது. பிக்பாஸ் நிகழச்சிக்கு பிறகு லாஸ்லியா திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். 

அதேபோன்று, இலங்கையைச் சேர்ந்த ஜனனி பிக்பாஸ் சீசன் 6-ல் பங்குபெற்றார்.  ஊடகத் துறையில் நெறியாளராக இருந்த ஜனனி, இந்த சீசனின் லாஸ்லியாவாக இருப்பார் என பலரிடையே எதிர்பார்ப்பு நிலவியது. 

எனினும் அவர், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை விட ஜனனி அதிக ஊதியம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

பிக்பாஸ் சீசன் 6-ல் ஜனனிக்கு ஒரு நாளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியமாக வரையறுக்கப்பட்டது. அவர் 70 நாள்கள் தங்கியிருந்த நிலையில், ரூ.17 லட்சத்துக்கு மேல் ஊதியம் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக ரூ.5 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.