
ஹாலிவுட் அளவில் ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட் மேன் என பல சூப்பர் ஹீரோ படங்கள் இருக்கின்றன. இந்திய அளவில் சூப்பர் ஹீரோ படங்கள் முயற்சிக்கப்பட்டாலும் அவை சின்னத்திரை தொடரான சக்திமான் அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சின்னத்திரை தொடராக வெளிவந்த சக்திமான் அப்போதைய குழந்தைகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடரில் யாருக்காவது ஆபத்து என்றால் மின்னல் போல சுழன்று வந்து அனைவரையும் காப்பாற்றுவார். சக்திமான் உண்மையான மனிதர் என்றே பல குழந்தைகளும் நினைத்தனர். அந்தத் தொடர் தற்போது திரைப்படமாகிறது.
இதையும் படிக்க | ஆலியா பட்டின் அசத்தல் நடனம்: வைரலாகும் ‘தோலிடா’ பாடல்
மூன்று பாகங்களாக இந்தப் படம் உருவாகிறது. இந்திய அளவில் பிரபல நடிகர் ஒருவர் சக்திமானாக நடிக்கிறார். பிரபல இயக்குநர் இயக்குவார். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறது.
இதனையடுத்து ரசிகர்கள் சக்தி மானாக அக்சய் குமார், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களின் பெயர்களைப் பரிந்துரைத்து வருகின்றனர். இந்திய அளவில் பிரபலமான நடிகர் என்று குறிப்பிட்டிருப்பதால் தென்னிந்திய நடிகர் ஒருவர் நடிக்கவே அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் தென்னிந்திய படங்கள் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. உதாரணமாக பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா போன்ற படங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
BIG ANNOUNCEMENT: SONY PICTURES TO BRING THE ICONIC 'SHAKTIMAAN' TO THE BIG SCREEN...
â taran adarsh (@taran_adarsh) February 10, 2022
This time, #Shaktimaan will be made for *cinemas*.
Will be a trilogy.
One of #Indiaâs major superstars will enact the title role.
A top name will direct. pic.twitter.com/ood6KvghPM
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






