தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்

பிரபல பாலிவுட் இசையமைப்பாளரான பப்பி லஹாரி(வயது 69) உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

பப்பி லஹாரி

Published On :

பிரபல பாலிவுட் இசையமைப்பாளரான பப்பி லஹாரி(வயது 69) உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

1973ஆம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான பப்பி லஹாரி, இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த 2021 ஏப்ரல் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பப்பி, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த பப்பி, திங்கள்கிழமை வீடு திரும்பிய நிலையில் நேற்று நள்ளிரவு திடீர் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவர் தமிழில் அபூர்வ சகோதரிகள், பாடும் வாணம்பாடி மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் சீலா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.