மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பு: தீவிர பிரிவில் தொடர் சிகிச்சை

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

News image

லதா மங்கேஷ்கர் (கோப்புப் படம்)

Updated On :12 ஜனவரி 2022, 12:32 pm IST

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் 10 - 12 நாள்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கருக்கு (92) கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வயது முதிர்வு காரணமாக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லதா மங்கேஷ்கருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும், ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது மருமகள் தெரிவித்தார். 

இந்நிலையில், லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய மருத்துவர் பிரதித் சம்தானி, கரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நிமோனியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.