பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இது விரைவில் சட்ட வடிவம் பெறும் என்று கூறப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெண்ணின் வயது 21 ஆக உயரும் பட்சத்தில் அவர்களது படிப்பு தடை படாது. அதன் மூலம் பெண்களின் வாழ்க்கை தரம் உயரும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | குக் வித் கோமாளியில் பாரதி கண்ணம்மா ரோஷினி?
இந்த நிலையில் நடிகை ஓவியா அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், ''பெண்கள் திருமண வயதை அதிகரிப்பது என்பது நல்ல முடிவு. இதனால் ஒரு பெண் நிறைய விஷயங்களை தியாகம் செய்ய நேராது. மேலும் சிறிய வயதில் பெரிய பொறுப்புகளை ஏற்க வேண்டியதில்லை. நான் முழுமையாக இந்த முடிவை ஆதரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










