பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இது விரைவில் சட்ட வடிவம் பெறும் என்று கூறப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெண்ணின் வயது 21 ஆக உயரும் பட்சத்தில் அவர்களது படிப்பு தடை படாது. அதன் மூலம் பெண்களின் வாழ்க்கை தரம் உயரும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | குக் வித் கோமாளியில் பாரதி கண்ணம்மா ரோஷினி?
இந்த நிலையில் நடிகை ஓவியா அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், ''பெண்கள் திருமண வயதை அதிகரிப்பது என்பது நல்ல முடிவு. இதனால் ஒரு பெண் நிறைய விஷயங்களை தியாகம் செய்ய நேராது. மேலும் சிறிய வயதில் பெரிய பொறுப்புகளை ஏற்க வேண்டியதில்லை. நான் முழுமையாக இந்த முடிவை ஆதரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.