திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

போலி உயில் மூலம் நடிகர் பிரபு, ராம்குமார் எங்களை ஏமாத்திட்டாங்க - சிவாஜியின் மகள்கள் பரபரப்பு புகார்

போலி உயில் மூலமாக நடிகர் பிரபு மற்றும் ராம குமார் தங்களை ஏமாற்றிவிட்டதாக நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :7 ஜூலை 2022, 3:36 pm IST


போலி உயில் மூலமாக நடிகர் பிரபு மற்றும் ராம குமார் தங்களை ஏமாற்றிவிட்டதாக நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

நடிகர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிவாஜி கணேசன் கடந்த 2001 ஆம் ஆண்டு காலமானார். அவருக்கு நடிகர் பிரபு, ராம் குமார் என்ற இரு மகன்களும் சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்களான சாந்தி மற்றும் ராஜ்வி வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர். அதில் சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின் ரூ.270 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ராம் குமாரும் பிரபுவும் முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகைப் பங்கைத் தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 

மேலும் தங்களுடைய தந்தை சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்து தொடர்பாக உயிர் எழுதி வைக்காத நிலையில், பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் போலியான உயில் தயாரித்து தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் தங்கள் தாய் வழி சொத்திலும் தங்களுக்கு பங்கு வழங்கவில்லை எனவும்  குறிப்பிட்டுள்ளனர். 

கோபாலபுரத்தில் இருந்த வீட்டை தங்களுக்கு தெரியாமல் பிரபு மற்றும் ராம் குமார் விற்றுவிட்டதாகவும் ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகள் மூலம் வரும் வாடகையில் தங்களுக்கு எந்த பங்கும் வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் படி, தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் அவற்றைப் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.