உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

மீண்டும் இணைகிறது கமல்ஹாசன் - ஃபகத் கூட்டணி?

நடிகர் கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:20 pm IST

நடிகர் கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

‘விக்ரம்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படும் சூழலில் மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’ ‘சியூ சூன்’ மற்றும் ‘மாலிக்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

நடிகர்கள் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில் மற்றும் இயக்குநர் மகேஷ் நாராயணன்

நடிகர்கள் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில் மற்றும் இயக்குநர் மகேஷ் நாராயணன்

இதனை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் நேர்காணலில் பேசிய இயக்குநர் மகேஷ் நாராயணன் கமல்ஹாசனுடன் இணைவதாகவும் அப்படத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பின், அந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில், ‘விக்ரம்’ படத்திற்குப் பின் கமல்ஹாசன் - ஃபகத் கூட்டணி மீண்டும் இணைய இருப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. 

மேலும்,  ஃபகத் ஃபாசிலும் சில நேர்காணல்களில் எதிர்காலத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பேன் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.