எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

விஜய்க்கு வில்லியாக சமந்தா?

தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:20 pm IST

தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 படத்தை இயக்கவிருக்கிறார். இன்னும் முறையான அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. 

விஜய் தற்போது நடித்துவரும் வாரிசு படத்தை விட தளபதி 67 படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். பீஸ்ட் பட தோல்விக்கு தளபதி 67 படம்தான் பதிலடி கொடுக்கும் விதமாக இருக்கும் என்பது எண்ணமாக இருக்கிறது. 

இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பதும் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைப்பதும் மட்டுமே உறுதியாகியுள்ளது. தற்போது லோகேஷ் இந்தப் படத்தின் முன் கட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். 

இந்த நிலையில் நடிகை சமந்தா இந்தப் படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா தற்போது தி ஃபேமிலி மேன் 2, புஷ்பா பட ஊ சொல்றியா மாமா பாடல் என இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறார்.

அவரை நடிக்க வைத்தால் படத்துக்கு இந்திய அளவில் வரவேற்பு இருக்கும் என்பது லோகேஷின் எண்ணமாக இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.