ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

கமல்ஹாசனின் விக்ரம் - ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்த தகவல்

திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:05 pm IST

திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

கமல்ஹாசனின் விக்ரம் படம் 3 வாரங்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் ரு.350 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படம் ரூ.500 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. ஓடிடி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி படம் வெளியான 28 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்படும். விக்ரம் படத்துக்கு கிடைத்த வாரம் தள்ளி ஜூலை 8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. 

திரையரங்குகளில் மக்களின் ஆதரவு கிடைத்துவரும் நிலையில் அதற்குள் ஓடிடியில் வெளியாகவிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விக்ரம் திரைப்படம் தனக்கு லாபகரமான படமாக அமைந்துள்ளதாக விக்ரம் படத்தின் வெற்றிவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.