முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோரான பாடகி சின்மயி - நடிகர் ராகுல் தம்பதி

பாடகி சின்மயிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். 

News image
Updated On :22 ஜூன் 2022, 2:41 pm IST

பாடகி சின்மயிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். 

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தனது இசைத் திறமையாலும் தனித்துவமான குரல் வளத்தாலும் 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார். 

தமிழ், தெலுங்கு மொழிகளில் பெரும்பாலான நாயகிகளின் குரலாக ஒலிப்பது இவரது குரல்தான். சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா, தாம் தூம் படத்தில் கங்கனா ரணாவத், வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டி, அயன், கண்டேன் காதலை படங்களில் தமன்னா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் திரிஷா, விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பில் சமந்தா என பெரும்பாலான நாயகிகளுக்கு இவர்தான் பின்னணி குரல் கொடுத்துவருகிறார். 

சின்மயிக்கும் மாஸ்கோவின் காவிரி, வணக்கம் சென்னை படங்களில் நடித்த ராகுலுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராகுல் தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் மன்மதடு 2 என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.  குழந்தைகளுக்கு திரிப்தா, ஷர்வாஸ் என பெயரிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.