தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கமலின் விக்ரம் ஓடிடியில் வெளியாகும் தேதி ? - ப்ரமோ விடியோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:09 pm IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான 4 வாரங்களுக்கு பிறகும் இந்தப் படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு குறையவில்லை. 

இந்தப் படம் ரூ.400 கோடி வசூலித்துள்ள நிலையில், அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் வரிசையில் 2வது இடத்தைப் பிடித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் இந்தப் படம் ஜுலை 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் என்று தகவல் பரவியது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அதற்குள்ளாக ஓடிடியில் வெளியானால் படத்தின் வசூல் பாதிக்கும் என்று கூறப்பட்டது. தற்போது புதிய ப்ரமோவுடன் இந்தப் படம் ஜூலை 8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாவதை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் உறுதி செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.