குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பொன்னியின் செல்வன் பின்னணி இசை - டிரம்ஸ் சிவமணி பகிர்ந்த விடியோ

பொன்னியின் செல்வன் பின்னணி இசையமைக்கும் விடியோவை டிரம்ஸ் சிவமணி பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :30 ஜூன் 2022, 3:38 pm IST

பொன்னியின் செல்வன் பின்னணி இசையமைக்கும் விடியோவை டிரம்ஸ் சிவமணி பகிர்ந்துள்ளார். 

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுவில் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் படம் குறித்த எந்தத் தகவலும் இல்லை. 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்துக்கு பின்னணி இசை பணிகளில் பங்காற்றியுள்ள டிரம்ஸ் சிவமணி விடியோ பகிர்ந்துள்ளார். இந்த விடியோவில் வந்தியத் தேவனாக கார்த்தி வரும் காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக தெரிகிறது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். 

மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.