திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

விருமன் படத்துக்கு பிறகு இயக்குநர் முத்தையாவின் அடுத்தப்பட ஹீரோ இவரா?

இயக்குநர் முத்தையாவின் அடுத்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :30 ஜூன் 2022, 2:51 pm IST

இயக்குநர் முத்தையாவின் அடுத்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் முத்தையா. கிராமத்து பின்னணியில் உருவாகும் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இருப்பினும் அவரது படங்கள் குறிப்பிட்ட சாதியை ஆதரிப்பதாக குற்றச்சாட்டும் உண்டு. 

Story image

இந்த நிலையில் தற்போது சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக  இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

இந்த நிலையில் அடுத்ததாக முத்தையா இயக்கும் படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறாராம். மதுரை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை யானை பட தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.