குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சமீபத்தில் வெளியான மாயோன் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு

சிபி சத்யராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாயோன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜூன் 2022, 4:22 pm IST

சிபி சத்யராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாயோன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி வெளியான படம் மாயோன். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 

இந்தப் படத்தை அருண்மொழி மாணிக்கம் தனது டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்து இந்தப் படத்தின் திரைக்கதையையும் எழுதியுள்ளார். கிஷோர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

சமீபத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தினுடைய இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருப்பதாகவும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் மாயோன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. நடிகர் சிபி சத்யராஜ், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் அடுத்த பாகத்திலும் தொடர்வார்களா அல்லது புதிய குழு இந்தப் படத்துக்காக களமிறங்குவார்களா என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.