தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

'நான் குழந்தையா இருக்கும்போது...'': சினேகா குறித்த சுவாரசியத் தகவலைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சினேகாவுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.  

Published On :

நடிகைகள் சினேகாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளனர். விளம்பர பட விடியோவை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், சினேகா குறித்து தனது நினைவுகளை பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ''நான் சிறு பெண்ணாக இருக்கும்போது, ''ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முதல்முறையாக ஒரு படப்பிடிப்பை பார்த்தேன். அப்போது என் அம்மா, பார்த்தது போதும் வா'' என்று அழைத்தார்கள். 

Story image

ஆனால் அழகான நடிகையான சினேகாவின் நடிப்பை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போழுது அவருடன் இணைந்து நடிக்கிறேன். இப்பொழுதும் அப்படித்தான் அவரைப் பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

Story image

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்ற மலையாள படத்தின் தமிழ் பதிப்பில் நடித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து 'மோகன்தாஸ்', அர்ஜுனுடன் இணைந்து 'தீயவர் குலைகள் நடுங்க' உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.