நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

''இளையராஜாவின் மற்றொரு பக்கம்...'' - இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த படம்

இளையராஜாவுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத் தனது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:13 pm IST

ராக் வித் ராஜா என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நாளை (மார்ச் 18) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடர்கள் கலந்துகொண்டு இளையராஜாவின் பாடல்களைப் பாடவிருக்கிறார்கள்.

Story image

விழா மேடையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இளையராஜாவுடன் இணைந்து ஒரு பாடலை பாடவிருக்கிறார். இதனையடுத்து இந்தத் தகவலை தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்களுக்கு பகிர்ந்திருந்தார். அவரது பதிவில், ''கனவு நினைவானது. என் இசைக்கடவுளுடன் மேடையில் பாடவிருக்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில் நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. அப்போது இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்த தேவி ஸ்ரீ பிரசாத், ''அன்பு மற்றும் பரிவு என இளையராஜாவின் இன்னொரு பக்கம். இந்தப் படம் வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழக்கூடிய படமாக இருக்கும்'' என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். 

இளையராஜாவின் மிகப் பெரிய ரசிகர்தான் தேவி ஸ்ரீ பிரசாத். தனது இசைக் கூடத்தில் இளையராஜாவின் படத்தை வைத்து அவருக்கு மரியாதை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.