5 வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கும் பாவனா
ஐந்து வருடங்களுக்குப் பிறகு பாவனா நடிக்கும் மலையாளப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பாவனா. கன்னட தயாரிப்பாளர் நவீனை 2018 ஜனவரியில் திருமணம் செய்துகொண்டார். 2017-ல் கடைசியாக ஏடம் ஜுவான் என்கிற மலையாளப் படத்தில் நடித்தார். இதன்பிறகு சமீபகாலமாக கன்னடப் படங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாவனா மலையாளப் படங்களில் மீண்டும் நடிக்கவேண்டும் என மலையாள ரசிகர்களும் திரையுலகினரும் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து 5 வருடங்கள் கழித்து மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார் பாவனா.
Ntikkakkakkoru Premondarnn என்கிற மலையாளப் படத்தில் பாவனா நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாவனா, ஷரஃபுதீன் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் அதில் அஷ்ரஃப் இயக்குகிறார். இசை - பால் மேத்யூஸ். இப்படத்தின் போஸ்டரைப் பிரபல நடிகர் மம்மூட்டி வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.