மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

'ஆர்ஆர்ஆர்' பட விழாவில் 'மாஸ்டர்' குறித்து ராஜமௌலி கருத்து

ஆர்ஆர்ஆர் பட விழாவில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் குறித்து இயக்குநர் ராஜமௌலி கருத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :24 மார்ச் 2022, 7:34 am

DIN

ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்து பெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'.  கீரவாணி இசைமைத்துள்ள இந்தப் படத்துக்கு செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் நாளை (டிசம்பர் 25) ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இந்த நிலையில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நிகழ்வில் நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' குறித்து ராஜமௌலி பேசினார். அப்போது, 'ஆர்ஆர்ஆர்' பணிகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தமிழ் படங்கள் எதனையும் பார்க்கவில்லை. 'மாஸ்டர்' படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. 

'மாஸ்டர்' படத்தை மிக சிறப்பாக லோகேஷ் இயக்கியுள்ளார். அனிருத்தின் பின்னணி இசை மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு 'மாஸ்டர்' படம் மிகவும் பிடித்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி குறித்து ராஜமௌலி எதுவும் தெரிவிக்கவில்லை. 

'ஆர்ஆர்ஆர்' படத்துக்கு பிறகு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை ராஜமௌலி இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.