''தமிழுக்கும் இசைக்கும்...'': ரஹ்மானின் பாடல் குறித்து முதல்வர் கருத்து

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூப்பில்லா தமிழே தாயே பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.  
''தமிழுக்கும் இசைக்கும்...'': ரஹ்மானின் பாடல் குறித்து முதல்வர் கருத்து

தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமைகளை சொல்லும்  விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'மூப்பில்லா தமிழே தாயே' என்ற பாடலை உருவாக்கியுள்ளார். பாடலாசிரியர் தாமரை இந்தப் பாடலை எழுதியுள்ளார். 

இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா, பூவையார் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்தப் பாடல் யூடியூபில் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 

இந்த நிலையில் சர்வதேச தொழில் கண்காட்சியில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபை சென்றுள்ளார். முதல்வரை தனது ஸ்டுடியோவுக்கு அழைத்து 'மூப்பில்லா தமிழே தாயே' பாடலை அவருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் காண்பித்துள்ளார்.

அப்போது அவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், ''துபை சர்வதேச தொழில் கண்காட்சியை பார்வையிட சென்ற என்னை நண்பர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டுடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள மூப்பில்லா தமிழே தாயே ஆல்பத்தைக் காண்பித்தார். தமிழுக்கும், இசைக்கும் உலகில் எல்லை இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com