16 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் களமிறங்கும் நடிகை லைலா

நடிகை லைலா மீண்டும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார். 
16 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் களமிறங்கும் நடிகை லைலா

நடிகர் விஜயகாந்த்தின் 'கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை லைலா. சூர்யாவுடன் 'நந்தா', 'உன்னை நினைத்து', 'பிதாமகன்', 'மௌனம் பேசியதே', விக்ரமுடன் இணைந்து 'தில்', அஜித்துடன் 'பரமசிவன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் 'உள்ளம் கேட்குமே', 'கண்ட நாள் முதல்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

கடைசி படம்

கடைசியாக நடிகர் அஜித்தின் 'திருப்பதி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகை லைலா களமிறங்கவிருக்கிறார். 

சர்தார் படத்தில் லைலா 

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் 'சர்தார்' படத்தில் லைலா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து அதிக படங்களில் நடித்த லைலா, தற்போது கார்த்தியுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

திருமண வாழ்க்கை 

ஈரான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமண செய்துகொண்ட லைலாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முன்னதாக ஜி தமிழ் ஒளிபரப்பான 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' என்ற நிகழ்ச்சியில் லைலா நடுவராக கலந்துகொண்டிருந்தார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com